Sunday, September 14, 2008

வன்னி/2008/9


எழுதியவர்-------

------செம்மதி
சமாதான காலத்தில்
தார் பூசப்பட்ட
சிதைந்த வீதிகள்
பயணிக்க முடியாதவாறு
படை களற்றுகின்றன
அதிகாரங்களின்
போலி முகங்கள் போல்

கூவிவரும்
றிகணைக்குப் பயந்து
ஓடி ஓடி
குறை மாதத்தில்
குழந்தை பெறுகிறாள்
கற்பினி ஒருத்தி
தெரு வோர மரத்தடியில்
சேலை மறைவில்
கணவன்
எறிகணைக்குப் பலியானான்

குழந்தைகளை
காப்பாற்றுவதாய் வரும்
கிபிர் விமானங்களின்
இரச்சல் கேட்டு பயந்து
சிதறி ஓடும் சிறுவர்கள்
அடுக்ககணம்
அடையாளம் காணப்பட்ட
இலக்காகிப் போகிறது
பிள்ளைகளின்
கல்விக் கூடம்

தண்ணி முறிப்பில்
விளைந்த கதிரை
அறுப்பதற்காய்சென்றவரின்
தலை அறுத்துப்போகிறது
பல்குழல் பிரங்கியின்
எறிகணைகள்
மல்லாவியில்
முழங்காவில்லில்
விளைந்தவற்றை வந்தவர்கள்
அள்ளிச்செல்வதாய்
குமுறுகின்றார்கள்
விவசாயிகள்
பசித்த வயிற்றுடன்

முன்ணுறு ரூபா
மண்னெண்ணையிலும்
மனித சுவாசத்திலும்
புகைத்தபடி இயங்கும்
மோட்டார் சைக்கிள்கள்
வீட்டுப் பொருட்களை
மலை போல் ஏற்றி
பண்டிவிரச்சானில் இருந்து
பத்தாவது இடம் தேடி
அலைந்து திரிகிறது

எலும்புக் கூடுகளாய்
வேயாது சிதறிக் கிடக்கும்
கொட்டில்களுக்குள்
எலும்பும் தோலுமாய்
அகதி மக்கள்
நிவாரண வண்டிகளுக்காக
இன்றும் பசித்த வயிற்றுடன்

காத்திருப்புத்கள்
தொடாகின்றன...............

No comments: