Thursday, August 7, 2008

குயில்க்குஞ்சுகள்


எழுதியவர்
-------------செம்மதி


இறக்கை முறிந்து
இரத்தம் கசிய
குற்றுயிராய்க் கிடக்கிறது
குயில்க்குஞ்சு
தன்குரலைக் காட்டியதால்
அடைகாத்து
தீன்கொடுத்த
ககாங்களால்
கொத்திக்குதறப்படுகின்றன
குயில்களும்
காகங்களும்
கருமையாகவே உள்ளன
குயில்கள் கருமையில்
மறைந்துகொள்ளப் பார்க்கின்றன
குயில்களின் குரல்கள்
இனிமையாகவே உள்ளன
அவற்ரின் செயல்
ரசிக்கும்படியாக இல்லை
காகங்களின் கூடுகளில்
சாதுரியமாக
முட்டையிடும்
குயில்களுக்கு
கூடுகட்டத் தெரியவில்லையா
அல்லது
முயலவில்லையா
என்னும் எவ்வளவு கலம்தான்
காகங்களின் கூடுகளில்
பலியிடப்படும்
இந்தக்குயில்க் குஞ்சுகள்

Wednesday, August 6, 2008

முதுகில் வரையப்பட்ட பயங்கர ஓவியங்கள்


எழுதியவர்
-------------செம்மதி


நீ
நீயாகவேஇருந்தாய்
உன்மனததில்
சாத்தானின் சகாக்கள்
ஊடுருவும்வரை
நீ என்னை
அன்புடன்
கட்டியணைகடகிறாய்
என்றே நான்
நம்பிநேன்
உன் கால்களால்
படுகுழி ஒன்றுதோண்டப்படுவதை
அறியாது
நீ அன்பு போர்த்து
வந்தாய்
நான்
உன்னை நம்பிநேன்
பற்கள் வெளித்தேரியும்படியான
உதடு பிரிப்புக்களை
அழகிய சிரிப்பு என்றே
நான் ஏமாந்தேன்
என்முதுகில் நீ வரைந்த
பல பயங்கர
ஓவியங்களை
என்னால்
காணமுடியாது போயிற்று
நானும் நீயும்
சோர்ந்திருந்த
இறுதிக் காலங்களை
நினைத்துப்பார்க்கிறேன்
இருண்டதும்
கொடூர மானதுமாய்
எனக்குள் பல
கேள்விக்குறிகளாய்
சிதறிக்கிடக்கிறது
இபடபோதெல்லாம்
உன்னைப்பற்றிய
நற்கருணை
ஆராதனைகள்
எனக்குள்
இடம்பொறுவதில்லை
எனது பாதங்கள்
வலிகளைத்தாங்கி
தொடர்ந்து பயணிக்கிறது......
..................................................