Wednesday, June 25, 2008

அதிகாரங்களும் அப்பாவிகளும்




எழுதியவர்
-------------செம்மதி

---------------------------------
வெடிகுண்டின் ஓசைகள்
இடியின் ஓசை
யாய்
குண்டுச்சிதறல்கள்
மழைத்துளிகளாய் போயிற்று

மூலைக்கு மூலை
முளைக்கின்றகோயில்களில்
வேளைக்கு வேளை
பூசைகள் நடக்குது
ஒரு வேளை உணவே
உருப்படியாய் இன்றி
எலும்பும் தோலுமாய்
பல சனங்கள்
அலைந்துதிரியுது

அயலில் கேட்கும்
நட்டுவ ஒலிக்கு
பக்கவத்தியமாய்
வேட்டொலிகள் கெட்கிறது
அதனால்
செத்தவர் வீட்டு
மரண ஓலத்திற்கு
ஒப்புப் பாடுவதாய்
நாதஸ்வர இசை
இதமாய் இசைக்கிறது

ஒவ்வோரு காலையும்
விடிகின்றபோது
வீதிகளில் கிடக்கும்
அப்பாவிப்பிணங்களின் நடுவே
பயணங்கள் நடக்கின்றது

அங்கும் இங்கும்
மக்களை ஏற்றி
அலைந்துதிரியும்
பேரூந்துகள்குண்டுகளால்
சல்லடையாக்கப்பட்டு
சிதைந்து கிடக்கிறது
உயிரற்றுக்கிடக்கும்தாயில்
பால் தேடுகின்றது
குழந்தை
சிறு குழந்தை
பல்குழல் பீரங்கிக்கு
பயங்கரவாதியாக
தெரிந்ததனால்
அளுகின்றாள் தாய்
கையில் தசைத்துண்டுகளுடன்

வெடிகுண்டால்
வயிறு பிளந்து
இரத்தத்தில் மிதக்கிநாள்
கற்பிணி ஒருத்தி மூச்சிழந்து
வெடிகுண்டால்
பிரசவிக்கப்பட்ட குழந்தை
என்னசெய்யும்??

மக்கள் பிரதிநிதிகள்
செல்லாக் காசாய்
செயலிழந்து போயினர்
பாவம் அவர்கள்
அதிகம் வாய்திறந்தால்
உயிரிழந்தும் போகலாம்
முன்நோரைப் போல

மானிடக்குருதியில்
பயணிக்கிறதுமாங்காய்த் தீவு
அதிகாரங்களின்இயக்கம்
சூடான இரத்தத்தில்....
-----------------------------