Thursday, August 7, 2008

குயில்க்குஞ்சுகள்


எழுதியவர்
-------------செம்மதி


இறக்கை முறிந்து
இரத்தம் கசிய
குற்றுயிராய்க் கிடக்கிறது
குயில்க்குஞ்சு
தன்குரலைக் காட்டியதால்
அடைகாத்து
தீன்கொடுத்த
ககாங்களால்
கொத்திக்குதறப்படுகின்றன
குயில்களும்
காகங்களும்
கருமையாகவே உள்ளன
குயில்கள் கருமையில்
மறைந்துகொள்ளப் பார்க்கின்றன
குயில்களின் குரல்கள்
இனிமையாகவே உள்ளன
அவற்ரின் செயல்
ரசிக்கும்படியாக இல்லை
காகங்களின் கூடுகளில்
சாதுரியமாக
முட்டையிடும்
குயில்களுக்கு
கூடுகட்டத் தெரியவில்லையா
அல்லது
முயலவில்லையா
என்னும் எவ்வளவு கலம்தான்
காகங்களின் கூடுகளில்
பலியிடப்படும்
இந்தக்குயில்க் குஞ்சுகள்

No comments: