Tuesday, September 23, 2008

போலிகள்


------செம்மதி......

தேன் தடவப்பட்ட
நாக்குகள்
புற்றில் கருநாகம்ய்
வாய்க்குளியில்
நெழிந்து புரழ்கின்றன
ஒவ்வோரு உச்சரிப்புக்களும்
உயிர்களைப் பிடிப்பதற்காய் செல்லும்
பிசாசுகளைப்போல
வான வெளியில்
பரந்து செல்கிறது

அவர்களின்
கைகளில் இருந்து
வெள்ளைப் புறாக்கள்
பறக்கவிடப்படுகின்றன
அவற்றின் கால்கள்
இறுகக் கட்டப்பட்டிருக்கிறது

அவர்களின் முகங்கள்
நெருங்கி கீளே விழுகின்றன
அந்தக் கொடூரத்தை
பார்க்க முடியாது
கண்கள் ஒவ்வொன்றும்
ஒளி இழந்து போகிறது

அப்பாவிகளின்
கண்ணீர் கோடுகளை
களுவுவதற்கு என்று
அவர்களின்
இரத்தம் கேட்கிறார்கள்

சமாதானத்திற்காய்
சண்டையிடுவதாய்
சொல்கிறார்கள் ??? ......


No comments: